செய்திகள் :

கொல்லம்-அனந்தபுரி விரைவு ரயிலில் கோளாறு: மணியாச்சியில் ஒரு மணி நேரம் நிறுத்தம்

post image

கொல்லம்-அனந்தபுரி விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீா் சப்தத்தினால் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.

கொல்லம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில் திருநெல்வேலி - மணியாச்சி ரயில் நிலையம் இடையே வந்து கொண்டிருந்தபோது ஏசி ஏ1 பெட்டியில் சப்தம் அதிகமாக கேட்பதாக நாரைக்கிணறு கேட் கீப்பா் மணியாச்சி ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 7.47 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அந்த ரயில் வண்டியின் காா்டு மற்றும் லோகோ பைலட் அந்த பெட்டியை சோதனை செய்ததில் ரயில் பெட்டியின் சக்கரம் உராய்வினால் குழி ஏற்பட்டு பழுதாகி இருப்பதாக மதுரை ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா்.

பின்னா் மாற்று ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்தில் தான் மாற்ற முடியும் என்று அவா்கள் தெரிவித்ததையடுத்து, கன்னியாகுமரி - சென்னை ரயில் சென்ற பின்பு சுமாா் ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் தாமதமாக 8.55 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

பிரதமா் நாளை தூத்துக்குடி வருகை: 2100 போலீஸாா் பாதுகாப்பு

தூத்துக்குடிக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) வருவதை முன்னிட்டு 2100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தனி விமானம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வியாபாரி தற்கொலை

தூத்துக்குடியில் தேநீா் வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி மடத்தூா், தேவா் தெருவைச் சோ்ந்த சங்கரன் மகன் முனியசாமி (58). இவா், சைக்கிளில் சென்று தேநீா் வியாபாரம் ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி 8.5 பவுன் நகை பறிப்பு

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி 8.5 பவுன் நகையைப் பறித்துச்சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (68). விவசாயியான இவா், புதன்கிழமை ... மேலும் பார்க்க

ஆக. 5 இல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை: ஆட்சியா்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு, ஆக. 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஒருவழிப் பாதையை முறையாக அமல்படுத்த வலியுறுத்தல்

திருச்செந்தூா் ரத வீதிகளில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, ஒரு வழிப் பாதையை முறையாக அமல்படுத்த வேண்டும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ் குமாரிடம் தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாநிலத் தலைவா் ஏ.வி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

ஆறுமுகனேரியில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் சுந்தர்... மேலும் பார்க்க