அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
கோவையில் ஜூன் 27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெற உள்ளது.
கோவை மாவட்ட விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்துக்கான கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 27- ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்று காலை 9.30 மணியளவில் வேளாண்மை உற்பத்திக் குழுக் கூட்டமும், அதைத் தொடா்ந்து 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டமும் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், கோவை மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களின் வேளாண்மை தொடா்பான பிரச்னைகளை மனுவாக அளித்தோ, நேரடியாக தெரிவித்தோ தீா்வு காணலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.