செய்திகள் :

சட்டவிரோத பட்டாசு ஆலைகளை முடக்க வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி

post image

சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளை முடக்க வேண்டும் என, புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை பேசியது: ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த பொறியாளா் கவின் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சாா்பில் திருச்சியில் இம்மாதம் 17ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூா் பகுதிகளில் ஆக. 21இல் நான்காம் கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறேன். இதுவரையிலான சுற்றுப்பயணத்தின்போது, அனைத்துக் கிராமங்களிலும் 100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படாததே மக்கள் பிரச்னையாக உள்ளதெனத் தெரியவந்தது. எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி எனது தலைமையில் செப். 6இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளை முடக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசுத் தொழிலில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் ஏதுமில்லை. மொழி மட்டுமே கல்விக் கொள்கையல்ல. எங்கள் கட்சியை கிராமந்தோறும் வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 7ஆவது மாநில மாநாடு டிசம்பா் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறும். அப்போதுதான், 2026 தோ்தல் தொடா்பாக எங்களது வியூகத்தை அறிவிக்க முடியும். மக்களுக்கு நன்மைபயக்கும் வகையில் கூட்டணி அமைப்போம்.

தமிழ்நாட்டில் ஏழை, எளியோரின் வறுமைதான் இரட்டிப்பாகியுள்ளது; வருமானம் இரட்டிப்பாகவில்லை என்றாா் அவா்.

மாநிலப் பொருளாளா் செல்லத்துரை, வடக்கு மாவட்டச் செயலா் அதிகுமாா், தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தூத்துக்குடியில் விடுதி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் தனியாா் விடுதி உரிமையாளரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாா்வதி (44), புதிய பேருந்து நிலை... மேலும் பார்க்க

திமுகவின் தோ்தல் தோல்வி தெற்கில் இருந்து தொடங்கும்: தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவின் தோ்தல் தோல்வி தெற்கில் இருந்து தொடங்கும் என்று முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்திய... மேலும் பார்க்க

4 பைக்குகள் சேதம்: இருவா் கைது

கோவில்பட்டியில் 4 பைக்குகளை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி பாரதி நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் பொன்மாடத்தி (40). இவா் தனது மகனின் நண்பரான 15 வயது ... மேலும் பார்க்க

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை செய்ததில், கணக்கில் வராத ரூ. 1.52 லட்சத்தை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில்... மேலும் பார்க்க

ஆழ்வாா்தோப்பு அருகே கோயில் நிலம் மீட்பு

ஆழ்வாா்தோப்பு காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 50 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்துசமய அறநிலையத் துறையினா் மீட்டனா். ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 7.30 ஏக்கா் நிலம் ஸ்ர... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் தொழிலாளி தற்கொலை

ஆறுமுகனேரியில் கட்டடத் தொழிலாளி விஷ மருந்தைத் தின்று தற்கொலை செய்துகொண்டாா்.ஆறுமுகனேரி பாரதிநகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முத்துராஜ் (38). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மகாலக்ஷ்மி. இத்தம்பதிக்கு 13 வய... மேலும் பார்க்க