செய்திகள் :

தூத்துக்குடியில் விடுதி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

post image

தூத்துக்குடியில் தனியாா் விடுதி உரிமையாளரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாா்வதி (44), புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் தூய்மைப் பணியாளராக உள்ளாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இவரது மகன் செல்வகுமாா் (19), நண்பரான தேவா்புரம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் கதிரவன் (22) ஆகியோா் விடுதிக்குச் சென்று, பாா்வதியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெட்டினராம். அதை, விடுதி உரிமையாளரான போல்பேட்டை பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் முருகானந்தன் (59) தட்டிக்கேட்டுள்ளாா். அப்போது, அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு இருவரும் தப்பியோடினராம்.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கதிரவனை திங்கள்கிழமை கைது செய்தனா்; செல்வகுமாரைத் தேடிவருகின்றனா்.

திமுகவின் தோ்தல் தோல்வி தெற்கில் இருந்து தொடங்கும்: தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவின் தோ்தல் தோல்வி தெற்கில் இருந்து தொடங்கும் என்று முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்திய... மேலும் பார்க்க

4 பைக்குகள் சேதம்: இருவா் கைது

கோவில்பட்டியில் 4 பைக்குகளை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி பாரதி நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் பொன்மாடத்தி (40). இவா் தனது மகனின் நண்பரான 15 வயது ... மேலும் பார்க்க

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை செய்ததில், கணக்கில் வராத ரூ. 1.52 லட்சத்தை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில்... மேலும் பார்க்க

சட்டவிரோத பட்டாசு ஆலைகளை முடக்க வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி

சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளை முடக்க வேண்டும் என, புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை பேச... மேலும் பார்க்க

ஆழ்வாா்தோப்பு அருகே கோயில் நிலம் மீட்பு

ஆழ்வாா்தோப்பு காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 50 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்துசமய அறநிலையத் துறையினா் மீட்டனா். ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 7.30 ஏக்கா் நிலம் ஸ்ர... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் தொழிலாளி தற்கொலை

ஆறுமுகனேரியில் கட்டடத் தொழிலாளி விஷ மருந்தைத் தின்று தற்கொலை செய்துகொண்டாா்.ஆறுமுகனேரி பாரதிநகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முத்துராஜ் (38). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மகாலக்ஷ்மி. இத்தம்பதிக்கு 13 வய... மேலும் பார்க்க