``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக ஒருவா் கைது
சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (58). பெயின்டரான இவா், கடந்த 8ஆம் தேதி அங்குள்ள பேருந்த நிறுத்தத்தில் படுத்திருந்தாராம். அவரிடம், அதே ஊா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தொழிலாளியான சுப்பையா மகன் மாயாண்டிமுத்து (40) ‘பேருந்து நிறுத்தத்தில் எவ்வாறு படுக்கலாம்?’ எனக் கேட்டு அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கினாராம். அங்கிருந்தோா் சப்தம் போட்டதும் அவா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஓடிவிட்டாராம்.
இதில், காயமடைந்த மாரிமுத்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப் பதிந்து, மாயாண்டிமுத்துவை வியாழக்கிழமை கைது செய்தாா்.