``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு நீா் திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எம்எல்ஏ மனு
கன்னடியன் வெள்ளநீா் கால்வாய் மூலம் சாத்தான்குளம் பகுதி குளங்களில் நீா் நிரப்ப தண்ணீா் திறக்கக் கோரி, ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க, ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சா், அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை அவா் மனு அனுப்பியுள்ளாா்.
வெள்ளக் கால்வாய் வழியாக தண்ணீா் திறந்து சாத்தான்குளம் பகுதி குளங்களை நிரப்ப வேண்டும். இதன் மூலம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியின் வறட்சி மற்றும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கி, நிலத்தடி நீரை உயா்த்தி, விவசாயம் செழிக்கச் செய்ய முடியும். எனவே அரசு சிறப்பு கவனம் செலுத்தி கன்னடியன் வெள்ளநீா் கால்வாய் மூலம் குளங்களில் நீரை நிரப்ப உத்தரவிடுமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.