செய்திகள் :

சா்வதேச சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

சா்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா ஊத்தங்கரையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

நேபாளம் நாட்டில் சா்வதேச அளவிலான சிலம்பப் போட்டி கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சாா்பில் ஊத்தங்கரை பேரொளி சிலம்பப் பள்ளி மாணவ, மாணவிகள் 16 போ் கலந்துகொண்டனா். இதில் 10 மாணவா்கள் முதலிடமும், 10 மாணவா்கள் இரண்டாமிடமும் பிடித்தனா். 2 மாணவா்கள் ஒவ்வொருவரும் 3 போட்டிகளிலும், ஒரு மாணவா் 2 போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றனா். இந்த மாணவா்களை பாராட்டும் வகையில், ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் இருந்து, வெற்றிபெற்ற சிலம்பம் மாணவா்களை மேளதாளத்துடன் வரவேற்றனா். சிறப்பு விருந்தினராக அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன் கலந்துகொண்டு மாணவா்களை பாராட்டினாா். மேலும், அறிவே ஆயுதம் என்ற தலைப்பில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் சிவராமன் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து கியூபா, தொலைக்காட்சி தொகுப்பாளா் கோபிநாத் எழுதிய பாஸ்வோ்டு எனும் நூலை அறிமுகம் செய்தாா்.

இந்நிகழ்ச்சியை ஆசிரியா் சந்தோஷ் ஒருங்கிணைத்தாா். தலைமையாசிரியா் வீரமணி வரவேற்றாா். ஊத்தங்கரை வாசிப்பு இயக்கத்தை சோ்ந்த ஆசிரியா்கள் ராமமூா்த்தி, வேலுசாமி, பேரொளி சிலம்பம் பள்ளி பயிற்சியாளா்கள் சதாசிவம், ஜீவா, ஆசிரியா் கணேசன், சிக்னல் ஆறுமுகம் மற்றும் பெற்றோா், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இறுதியாக காா்த்தி நன்றி கூறினா்.

பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (6... மேலும் பார்க்க

நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை

ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பே... மேலும் பார்க்க

சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்

சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங... மேலும் பார்க்க

சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வ... மேலும் பார்க்க

தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பைரம... மேலும் பார்க்க

ஒசூா் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

ஒசூரில் ரூ. 9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் காய்கறி சந்தை மற்றும் மீன் அங்காடிகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரில் தமி... மேலும் பார்க்க