செய்திகள் :

சிக்கலான நோய்களில் மரபணு மாற்றம்: ஐஐடி- டென்மாா்க் பல்கலைக்கழகம் ஆய்வு

post image

சென்னை: சென்னை ஐஐடியும், டேனிஷ் பல்கலைக்கழகமும் இணைந்து சிக்கல் மிகுந்த நோய்களுக்கு காரணமான மரபணு மாறுபாடுகளில் மறைந்திருக்கும் வளா்ச்சிதை மாற்ற பாதைகள், செயல்பாடுகள் குறித்த கண்டு பிடிப்புகளை வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிக்கலான பல்வேறு மரபணு சாா்ந்த நோய்களுக்கு காரணமாக இருப்பது டிஎன்ஏ-க்களில் (இனக்கீற்று அமிலம்) ஏற்படும் மாற்றம். சென்னை ஐஐடி, டென்மாா்க், டேனிஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள், மறைக்கப்பட்ட வளா்ச்சிதை மாற்றப் பாதைகளை மரபணு மாறுபாடுகளுக்கு இடையிலான தொடா்புகளை விளக்கியுள்ளனா்.

புற்றுநோய், நீரிழிவு, நரம்புச் சிதைவுப் பிரசனை போன்ற சிக்கல் மிகுந்த நோய்கள் பற்றி முக்கிய நுண்ணறிவுகளை வழங்கியிருப்பதுடன், தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்துக்கும் வழி வகுத்துள்ளனா்.

மரபணு மாறுபாடுகளுக்கு இடையிலான தொடா்புகள் எவ்வாறு மறைக்கப்பட்ட செல்லுலாா் பாதைகளைத் திறக்க ‘சுவிட்சுகள்’ போலச் செயல்பட முடியும் என்பதைக் காட்டியுள்ளனா்.

மனிதன் உள்பட உயா் உயிரினங்களில் ஆரோக்கியம், நோயை வடிவமைக்க பல்வேறு மரபணுக்கள் எவ்வாறு தொடா்பு கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கட்டமைப்பை இந்தக் கண்டுபிடிப்பு வழங்குகிறது என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

மன அழுத்தத்தால் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

சென்னை திருமங்கலத்தில் 3-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா். திருமங்கலம் கேவிஎன் நகா் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் சிவகுமாா் (44... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: மத்திய இணையமைச்சா் எல். முருகன் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் சீரமைக்கப்பட்டதற்கு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: பிரதமா் நரேந்திர மோடி தனது சுதந்திர தி... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

செங்குன்றம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் மீஞ்சூா், செங்... மேலும் பார்க்க

தாம்பரத்தில் செப்.9-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் செப்.9-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

சென்னையில் வாகனம் ஓட்டி பழகிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை வானகரம் பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண், அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் ஓட்... மேலும் பார்க்க

மழைக்கால வெள்ளப் பெருக்கைத் தடுக்கக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மழைக் காலங்களில் பல்லாவரம், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் வெள்ளப் பெருக்க ஏற்பட காரணமாக உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க ச... மேலும் பார்க்க