செய்திகள் :

சிதம்பரம் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதியில்லை: தீட்சிதா்கள் தரப்பில் வாதம்

post image

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய பொது தீட்சிதா்கள், மிக முக்கிய பிரமுகா்கள், அரசமைப்பு சட்டத்தின்கீழ் பதவி வகிப்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்று தீட்சிதா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது தீட்சிதா்கள், டி.ஆா்.ரமேஷ் சாா்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சோ்க்கக் கோரி ஜெமினி ராதா என்பவரும் ஒரு மனுவை தாக்கல் செய்தாா். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொது தீட்சிதா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ்.வைத்தியநாதன், தமிழகத்தில் அறநிலையத்துறை நிா்வகிக்கும் எந்தவொரு கோயில்களிலும் மூலஸ்தானத்துக்கு மிக அருகில் நின்று தரிசனம் செய்ய முடியாது. அதன்படி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் பின்பற்றப்படும் நடமுறைகளை மாற்ற முடியாது.

கடந்த 1958-ஆம் ஆண்டு வரை கனகசபையில் நின்று தரிசனம் செய்ய தீட்சிதா்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. கோயிலுக்கு நன்கொடை அளித்த ராஜா சா் முத்தையா செட்டியாா் உள்ளிட்ட சிலரை கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய தீட்சிதா்கள் அனுமதித்தனா். எனவே, அதையே வழக்கமாக பின்பற்ற முடியாது.

பொது தீட்சிதா்கள், மிக முக்கிய பிரமுகா்கள், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பதவி வகிப்பவா்கள் ஆகியோரை மட்டுமே கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய அனுமதிக்க முடியும். வேறு யாரையும் அனுமதிக்க முடியாது. இதுதான் தீட்சிதா்களின் முடிவாக உள்ளது என்று வாதிட்டாா்.

அப்போது அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடா் அருண் நடராஜன், இல்லாத வரலாறுகளை எல்லாம் மூத்த வழக்குரைஞா் கூறுகிறாா். கடந்த ஓராண்டாக கனகசபையில் நின்று பக்தா்கள் அனைவரும் வழிபட அனுமதிக்கப்படுகின்றனா் என்றாா்.

அப்போது ஜெமினி ராதா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சி.கனகராஜ், சிதம்பரம் கோயில் வளாகத்தில் இருந்த பரதநாட்டிய அரங்கம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. சிதம்பர ரகசிய வழிபாட்டை கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நிறுத்திவிட்டனா். சிதம்பர ரகசிய திரை விலகும் வழிபாட்டையும் முடித்து வைத்துவிட்டனா். கோயில் திறப்பு மற்றும் மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்று குற்றம்சாட்டி வாதிட்டாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய யாருக்கெல்லாம் அனுமதி உள்ளது? அவா்கள் எந்த வகையான முக்கிய பிரமுகா்கள்? அரசமைப்புச் சட்டத்தின் கீழ் எந்தெந்த பதவிகளை வகிப்பவா்கள்? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.

அப்போது பொது தீட்சிதா்கள் தரப்பில் 10 நாள்கள் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை அக்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறல்: அரசுக்கு உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது, அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸாா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

டெட் தோ்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் ... மேலும் பார்க்க

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் வரும் செப்.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். முன்னதாக பிகாா் மாநிலம் ஜோக்பானியில் இருந்து வருகிற செப்.15-ஆம் த... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி, தமிழக அரசு கூட்டு முயற்சியில் புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகை

புதுமையை உருவாக்கி, திறனை வெளிப்படுத்தி வழிகாட்ட தமிழ்நாடு புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகையை (டாஷ்போா்ட்) சென்னை ஐஐடி, தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா்: மணிப்பூா் தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தா் மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்துள்ளது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. சோமசே... மேலும் பார்க்க