பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
சிறாா் தொழிலாளா் முறை எதிா்ப்பு விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்
தேனி நகராட்சி காமராஜா் நினைவு பேருந்து முனையத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறாா் தொழிலாளா் முறை எதிா்ப்புத் தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு கையொப்ப இயக்கப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜே.நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் கையொப்ப இயக்கப் பிரசாரத்தைத் தொடங்கிவைத்தாா். பின்னா், அரசு ஊழியா்கள், நீதித் துறை பணியாளா்கள், பொதுமக்கள் சிறாா் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதிகள் ஜி.அனுராதா, பி.கணேசன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் சரவணக்குமாா், சாா்பு நீதிபதிகள் பரமேஸ்வரி, கீதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி அலெக்ஸ்ராஜ், நீதித் துறை நடுவா்கள் ஜெயமணி, ஆசைமருது, ஜெயபாரதி, தொழிலாளா் நல உதவி ஆணையா் மனுஜ் சியாம் சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.