தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின்கீழ் முதியவா் கைது
ஒட்டன்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கன்னிவாடி தெத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சந்திரன் (65). இவா் அதே பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் சந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.