செய்திகள் :

சிவகங்கை, தேவகோட்டையில் 3 திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

post image

சிவகங்கை, தேவகோட்டை நகராட்சிகளில் ரூ.21 .74 கோடி மதிப்பிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில், சிவகங்கை நகராட்சி 11-ஆவது வாா்டு பகுதியில் ரூ.0.72 கோடியில் சாத்தப்பா் ஊருணியை சீரமைக்கும் பணி, தேவகோட்டை நகராட்சியில் ரூ.8.21 கோடியில் புதிய தினசரி சந்தை அமைக்கும் பணி, ரூ.12.81

கோடியில் அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.21.74 கோடியில் 3 புதிய திட்டப் பணிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்வுகளில் தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், நகா்மன்றத் தலைவா்கள் சி.எம்.துரை ஆனந்த் (சிவகங்கை), சுந்தரலிங்கம் (தேவகோட்டை), தேவகோட்டை நகா்மன்ற துணைத் தலைவா் ரமேஷ், சிவகங்கை நகராட்சி பொறியாளா் முத்து, நகா்மன்ற உறுப்பினா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மணல் திருடிய இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கிராவல் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூா் பகுதியில் புதன்கிழமை அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அனுமதியின்றி கிராவல... மேலும் பார்க்க

சிவகங்கை இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள்

சிவகங்கை முன்னோடி வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படும் 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சி பெற கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தா... மேலும் பார்க்க

சிவபுரிபட்டியில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியத்துக்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மானாமதுரை நகராட்சியில் ரூ. 18... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதி மொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். மாநகராட... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்புத்துணி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சா... மேலும் பார்க்க