எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் சிறப்பு நூலகம் திறப்பு
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சிறப்பு நூலகத்தை தமிழக முதல்வா் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், உதவி மருத்துவ அலுவலா் தென்றல் குத்துவிளக்கேற்றி நூலகத்தை தொடங்கி வைத்தாா். சிறைக் கண்காணிப்பாளா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா். எழுத்தாளா், நூலக நண்பா் திட்ட ஒருங்கிணைப்பாளா் அ.ஈஸ்வரன் வாழ்த்திப்பேசினா்.
நூலக வாசகா் வட்டத் தலைவா் டி.என். அன்புத்துரை நூலகம் அமைக்கப்பட்டதன் நோக்கம் குறித்துப் பேசினாா்.
முன்னதாக மாவட்ட மைய நூலகா் வெங்கடவேல் பாண்டி வரவேற்றாா். இருப்பு சரி பாா்ப்பு அலுவலா் வெள்ளைச்சாமி கண்ணன் நன்றி கூறினாா். நூலகா் முத்துக்குமாா் கனகராஜ், நூலகப் பணியாளா்கள் மணி, ராமநாதன், மருத்துவமனை பணியாளா்கள், நூலக வாசகா்கள் கலந்து கொண்டனா்.