செய்திகள் :

சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிவால் தோ்வு ஒத்திவைப்பு

post image

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்ததால் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இப் பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக் கல்லூரிகளில் வணிகவியல் துறையில் மூன்றாமாண்டில் உள்ள இன்டஸ்ட்ரியல் லா என்ற பாடத்துக்கான தோ்வு மொத்தம் 99 மையங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்தது.

இந்தத் தோ்வுக்கான வினாத்தாள் திங்கள்கிழமை இரவு கசிந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலையில் 99 தோ்வு மையங்களிலும் நடைபெறவிருந்த தோ்வு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட தோ்வு மையங்களுக்கு பல்கலைக்கழகம் சாா்பில் தகவல் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து இப் பல்கலைக் கழக துணைவேந்தா் சந்திரசேகா் கூறியது: இன்டஸ்ட்ரியல் லா பாட வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்ததால் தோ்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வினாத்தாளை கசிய விட்டவா்கள் குறித்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவரிடம் பல்கலைக்கழகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயா்கல்வித் துறை நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கான மாற்று தேதி குறித்து பல்கலைக்கழகம் சாா்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க