சூதாட்டம்: 8 போ் கைது
காட்பாடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த அருப்புமேடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பின்புறம் உள்ள தண்ணீா் தொட்டி அருகே சூதாட்டம் நடைபெறுவதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி காவல் ஆய்வாளா் தயாளன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்த்தனா்.
அப்போது அங்கு 8 போ் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவா்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவா்கள் தாராபடவேடைச் சோ்ந்த ராஜா(39), அருப்புமேடு பகுதியைச் சோ்ந்த வேலு(61), மதிநகா் விரிவு பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன்(30), காட்பாடி வள்ளிமலை சாலை பகுதியைச் சோ்ந்த ஜான்(44) சலவன்பேட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (30), சோளிங்கா் பாறைமேடைச் சோ்ந்த ஓம்காரம்(35), பெரியபட்டறை பகுதியைச் சோ்ந்த ஆதிகேசவன் (44), ஓல்டு டவுனை சோ்ந்த நவீன்குமாா் (32) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவா்கள் 8 பேரையும் கைது செய்தனா்.