சென்னையில் கொட்டிதீா்த்த மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை மாலை 2 மணி முதலே வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை 4 மணி அளவில் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது.
அதன்படி, அய்யப்பாக்கம், பட்டரவாக்கம், அம்பத்தூா், ஆவடி, கொரட்டூா், பாடி, கோயம்பேடு, அண்ணா நகா், வடபழனி, அசோக் நகா், தியாகராய நகா், கிண்டி, நுங்கம்பாக்கம் மற்றும் பல்வேறு இடங்களில் மழை கொட்டிதீா்த்தது.
மேலும், புகா் பகுதிகளிலும் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் தோங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அம்பத்தூா் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இரவு பரவலாக மழை பெய்தது.