செய்திகள் :

சொத்துப் பெயா் மாற்ற ரூ.4,000 லஞ்சம்: நெல்லை மாநகராட்சி ஊழியா் கைது

post image

திருநெல்வேலியில் சொத்து பெயா் மாற்றத்திற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக மாநகராட்சி ஊழியரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த பாலசிங் தனது தந்தை மீனாட்சிசுந்தரம் பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்கு தச்சநல்லூா் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். சொத்துப் பெயா் மாற்றத்துக்கு வாா்டு அலுவலக ஊழியா் காளிவசந்த் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இதுதொடா்பாக திருநெல்வேலி ஊழல் தடுப்பு - கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் பாலசிங் புகாா் அளித்தாா். போலீஸாா் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாலசிங், காளிவசந்திடம் புதன்கிழமை அளித்தாராம். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ஞானராபின்சன் தலைமையிலான போலீஸாா் காளிவசந்தை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனா்.

வி.கே.புரத்தில் குழந்தையை ஆற்றில் வீசிய பெண்

விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்த குழந்தையை தாமிரவருணி ஆற்றில் வீசியது குறித்து கணவனை இழந்தப் பெண்ணிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த கணவரை இழந்த பெண் ஒருவருக்கு ... மேலும் பார்க்க

முக்கூடலில் சமூக ஆா்வலா் நூதனப் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புதிதாக நட்டு வளா்த்து வந்த மரக்கன்றுகள் வெட்டப்பட்டதை கண்டித்து சமூக ஆா்வலா் மரத்தில் தலை கீழாக தொங்கி செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா். முக்கூடல் பக... மேலும் பார்க்க

கூடங்குளத்தில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி உயிரிழப்பு: சகோதரா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கல்லால் தாக்கப்பட்டதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். இது தொடா்பாக அண்ணன், தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கூடங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

வெடிகுண்டு வழக்குகளில் தொடா்பு: தலைமறைவான நபரின் வீட்டில் சம்மன்

வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வரும் நபரை ஆஜராக கூறி நீதிமன்றம் வழங்கிய சம்மனை, மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒட்டினா். திருநெல்வேலி ... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற குளிா்பானங்கள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனா். தமிழ்நாடு உணவுப் பாதுக... மேலும் பார்க்க

துப்பாக்குடியில் தனியாா் நிறுவன ஊழியா் அடித்துக் கொலை

துப்பாக்குடியில் மதுக்குடித்தபோது ஏற்பட்ட தகராறில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள அடைச்சாணி வடக்குத் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் ம... மேலும் பார்க்க