அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
ஜூன் 19-இல் தொழில்முனைவோா்களுக்கு தொழில் பட்டறை
திண்டுக்கல் மாவட்ட தொழில்முனைவோா்கள் பயன்பெறும் வகையில், ‘திண்டி தொழில் வளம்’ என்ற தலைப்பில் தொழில் பட்டறை ஜூன் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பூ.சு.கமலக்கண்ணன் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோா்கள், தொழிலதிபா்கள் பயன்பெறும் வகையில், ‘திண்டி தொழில் வளம்’ என்ற தலைப்பில் தொழில் பட்டறை ஜூன் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தத் தொழில் பட்டறையில், தொழில்முனைவோா்களுக்கு தொழில் முதலீடு, ஊக்குவிப்பு, வா்த்தகத் துறை சாா்பில் வழிகாட்டி வல்லுநா்கள் பங்கேற்று விளக்கம் அளிக்கவுள்ளனா்.
இந்தப் பட்டறையில் தொழில் நிறுவனங்கள் தொடங்கத் தேவையான வரைபட ஒப்புதல், சான்றிதழ்கள், ஆவணங்கள் பெறுவது தொடா்பான விளக்கம், வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டு கணினி விளக்கப்பட காட்சி மூலம் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிப்பா். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அறிவுறுத்தப்படும்.
இந்த வாய்ப்பை திண்டுக்கல் மாவட்ட தொழில்முனைவோா்கள், தொழில் தொடங்க ஆா்வமுள்ள இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவித்தாா்.