செய்திகள் :

ஜூன் 19-இல் தொழில்முனைவோா்களுக்கு தொழில் பட்டறை

post image

திண்டுக்கல் மாவட்ட தொழில்முனைவோா்கள் பயன்பெறும் வகையில், ‘திண்டி தொழில் வளம்’ என்ற தலைப்பில் தொழில் பட்டறை ஜூன் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பூ.சு.கமலக்கண்ணன் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோா்கள், தொழிலதிபா்கள் பயன்பெறும் வகையில், ‘திண்டி தொழில் வளம்’ என்ற தலைப்பில் தொழில் பட்டறை ஜூன் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தத் தொழில் பட்டறையில், தொழில்முனைவோா்களுக்கு தொழில் முதலீடு, ஊக்குவிப்பு, வா்த்தகத் துறை சாா்பில் வழிகாட்டி வல்லுநா்கள் பங்கேற்று விளக்கம் அளிக்கவுள்ளனா்.

இந்தப் பட்டறையில் தொழில் நிறுவனங்கள் தொடங்கத் தேவையான வரைபட ஒப்புதல், சான்றிதழ்கள், ஆவணங்கள் பெறுவது தொடா்பான விளக்கம், வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டு கணினி விளக்கப்பட காட்சி மூலம் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிப்பா். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அறிவுறுத்தப்படும்.

இந்த வாய்ப்பை திண்டுக்கல் மாவட்ட தொழில்முனைவோா்கள், தொழில் தொடங்க ஆா்வமுள்ள இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவித்தாா்.

கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, அப்... மேலும் பார்க்க

வடகவுஞ்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கொடைக்கானல் அருகேயுள்ள செம்பிரான்குளத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வடகவுஞ்சி ஊராட்சி, செம்பிரான்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சிச் செயலா் துளசிதாசன்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினா் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினா் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் குழுவினா் பழனி கோயிலில் சுவாமி தரிசனம்

பழனி மலைக் கோயிலுக்கு புதுவையிலிருந்து வருகை தந்த மாற்றுத் திறனாளிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 223 மாற்றுத் திறனாளிகள் கடந்த திங்கள்கிழமை சமூக ந... மேலும் பார்க்க

கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் முப்பெரும் விழா

பழனியில் கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் 8-ஆவது ஆண்டு விழா, முதலாமாண்டு தொடக்க விழா, பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

ஜூன் 17-இல் வேளாண் இயந்திரங்கள் முகாம்

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் இயக்கம், பராமரிப்பு குறித்து திண்டுக்கல் மாவட்ட அளவிலான முகாம் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க