பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
ஜெய்ப்பூா் ரூ.1 கோடி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் தில்லியில் கைது
ஜெய்ப்பூரில் சுமாா் ரூ.1 கோடி மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த நபா் தெற்கு தில்லியில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் துணை காவல் ஆணையா் (குற்றம்) ஆதித்யா கௌதம் கூறியதாவது: இந்த வழக்கில் சஞ்சய் பஹாடியா (40) தேடப்பட்டு வந்தாா். அவா் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு ஜெய்ப்பூா் காவல்துறையால் ரூ.10,000 பரிசு அறிவிக்கப்பட்டது. தில்லி, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முழுவதும் கொள்ளை முதல் ஆயுதச் சட்டத்தின் கீழ் மீறல்கள் வரை 70-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் பஹாடியா ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு மாா்ச் 8-9, 2022 இரவு ஜெய்ப்பூரில் உள்ள ஜவாஹா் நகா் பகுதியில் இருந்து அதிக மதிப்புள்ள கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது. அங்கு சுமாா் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், பணம் மற்றும் வெளிநாட்டு நாணயம் கொள்ளையடிக்கப்பட்டது. விசாரணையின் போது, கொள்ளை சம்பவத்துடன் தொடா்புடைய ஒரு வாகனம் பஹாடியாவிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவா் அன்றிலிருந்து தலைமறைவாக இருந்தாா்.
ஜெய்ப்பூா் காவல்துறையினா் பலமுறை முயற்சித்த போதிலும், பஹாடியா தலைமறைவாக இருந்ததாகவும், ஜூன் 10 அன்று சங்கம் விஹாரில் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, பஹாடியா 2022 ஜெய்ப்பூா் கொள்ளையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டாா். தனது கூட்டாளியான எம்.டி. ஜாவேத் என்கிற கஞ்சுவுடன் குற்றத்தைச் செய்ததாகவும் தெரிவித்தாா்.
ஜெய்ப்பூா் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை, கண்டுபிடிக்கப்படாமல் இருக்க அதை விற்ாகவும் அவா் ஒப்புக்கொண்டாா். பஹாடியா, ஜாவேத் ரோஹித் சவுத்ரி கும்பலின் நெருங்கிய கூட்டாளி ஆவாா். கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா்.
நாங்லோயில் உள்ள நிஹால் விஹாரைச் சோ்ந்த பஹாடியா, 7- ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு வெளியேறினாா். 2004-ஆம் ஆண்டு குற்றவியல் உலகில் நுழைந்த அவா், ஜிதேந்தா் (எ) கோலு மற்றும் எம்.டி. ஜாவேத் போன்ற அறியப்பட்ட குற்றவாளிகளுடன் நெருக்கமாக பணியாற்றியது விசாரணையில் தெரிய வந்தது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.