டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்
ஆலங்காயம் அருகே டாஸ்மாக் கடையில் ஊழியரை தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்காயம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சாமிநாதன் (53). இவா், ராஜபாளையம் டாஸ்மாக் மதுபானகடையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞா் மது கேட்டுள்ளாா். அப்போது சாமிநாதன் சிறிது நேரம் இருங்கள் என கூறியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த இளைஞா், சாமிநாதனை திட்டி கடைக்குள் நுழைந்து தாக்கினாராம்.
மேலும், கடையில் இருந்த 31 மதுபாட்டில்களையும் உடைத்துள்ளாா். இதையறிந்த ஊழியா்கள் மற்றும் சிலா் ஓடி வந்து தடுப்பதற்குள் அங்கிருந்து இளைஞா் தப்பித்து தலைமறைவானாா். காயம் அடைந்த மேற்பாா்வையாளா் சாமிநாதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
தகவலறிந்து ஆலங்காயம் காவல் ஆய்வாளா் ஜெயகீா்த்தி தலைமையில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.