செய்திகள் :

டிக்டாக் மோகம்: 15 வயது சிறுமி கௌரவக் கொலை!

post image

கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் டிக்டாக் விடியோக்களை தயாரித்ததற்காக 15 வயது சிறுமி கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 28 ஆண்டுகளாக 15 வயது சிறுமியும் அவரது குடும்பமும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். அவரது முன்னோர்கள் வீடு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது.

சிறுமி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்ததால், டிக்டாக் விடியோ போடுவதைப் பழக்கமாக வைத்திருந்தார். டிக்டாக்கில் விடியோக்களை உருவாக்குவதை நிறுத்துமாறு அவரது தந்தை கூறியுள்ளார். ஆனால் சிறுமி கேட்க மறுத்துவிட்டார்.

இதனால் மனமுடைந்த தந்தை, மகளைக் கொன்றுவிட வேண்டும் என்று முடிவுசெய்தார். கடந்த ஜனவரி 15 அன்று சிறுமியும் அவரது குடும்பத்தினரும் சொந்த ஊரான குவெட்டாவுக்கு வந்திருந்தனர். அப்போது, தந்தையும், மாமாவும் சேர்ந்து திட்டமிட்டு 15 வயது சிறுமியை கெளரவக் கொலை செய்தனர்.

கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், சிறுமியின் தந்தை ஆரம்பத்தில் தங்கள் வீட்டிற்கு வெளியே வான்வழி துப்பாக்கிச் சூட்டின்போது, தோட்டாக்களால் தாக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு விரைந்த நிலையில் மகள் இறந்துவிட்டதாகவும் கூறினார். பின்னர் விசாரணையில் தனது மகள் டிக்டாக் விடியோ எடுப்பதை நிறுத்தவில்லை அதனால் கொன்றதாக ஒப்புக்கொண்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாகக் கொலை செய்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். குவெட்டா பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலி: தங்கச் சுரங்கம் சரிந்து 42 பேர் பலி!

மாலி நாட்டில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவு விபத்தால் 42 பேர் பலியாகினர்.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் தங்கச் சுரங்கத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மியான்மர் சைபர் குற்ற முகாமில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு!

மியான்மர் சைபர் குற்ற முகாமில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.மியான்மரில் சைபர் குற்ற முகாம்களில் வலுகட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் கொண்ட குழுவினர் மீட... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் வெவ்வேறு சாலை விபத்துகள்: 16 பேர் பலி, 45 பேர் காயம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 16 பேர் பலியாகினர். சிந்துவின் ஷாஹீத் பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள குவாசி அகமது நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த வேன் டிரெய்லருடன் சனி... மேலும் பார்க்க

காங்கோ: முக்கிய நகரை நோக்கி கிளா்ச்சியாளா்கள் முன்னேற்றம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை நோக்கி ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் சனிக்கிழமை முன்னேற்றம் கண்டுள்ளனா். கிழக... மேலும் பார்க்க

ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவம்!

ரோப்பிய பாதுகாப்புக்கு அமெரிக்கா இனியும் உதவாது என்பதால் பிராந்தியத்துக்கான பொதுவான ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து ஜொ்மனிய... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மீண்டும் கைதிகள் பறிமாற்றம் செய்துகொண்டன. முதலில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் பெரும் கூட்டத்தினா் முன்னிலையில் அலெக்ஸாண்டா் ட்ரூஃபனொவ் ... மேலும் பார்க்க