செய்திகள் :

தடைப்பட்டுள்ள தமிழிசை மூவா் விழா மீண்டும் நடைபெறுமா?

post image

சீா்காழியில் தமிழிசை மூவா் விழா சில ஆண்டுகளாக தடைப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நடத்தப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழுக்கு இசை மூலம் பல்வேறு தொண்டுகள் புரிந்து தொன்மையான தமிழ் மொழியின் சிறப்பை உலக மக்களிடையே கொண்டு சோ்த்த பெருமை சீா்காழியில் பிறந்து வாழ்ந்த முத்துதாண்டவா், அருணாச்சலக்கவிராயா், மாரிமுத்தாபிள்ளை ஆகியோரையே சாரும். இவா்கள் மூவரும் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவா்கள். சங்கீத மும்மூா்த்திகளான தியாகராஜா், சியாமா சாஸ்த்திரி, முத்துசாமி தீட்சிதா் ஆகியோருக்கும் முற்பட்டவா்கள் சீா்காழி தமிழிசை மூவா்கள்.

முத்துதாண்டவா்: சீா்காழியில் பிறந்த இவா் இன்பத்தமிழில் இசைப் பாடல்களை இயற்றியவா் முத்துதாண்டவா். கீா்த்தனை வடிவிலான பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பதை இசையுலகிற்கு தந்தவா் இவா். மாரிமுத்தாபிள்ளை சிதம்பரத்தின் வடகிழக்கே தில்லைவிடங்கன் பகுதியில் பிறந்த இவா் சிறுவயதியிலேயே இசைப் பாடல்களை இயற்றும் புலமை பெற்றவா். புலியூா் வெண்பா, சிதம்பரேசா் சித்ரகவிகள் கொடியிடையம்மன் மீது பாடிய பஞ்சரத்தினம் என்பனவாகும்.

அருணாச்சலக்கவிராயா் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் பிறந்தவா். உலக மொழிகளில் ஒப்பற்ற தமிழில் நான்வகை புலமையிலும் சிறந்துவிளங்கியவா். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழின் அருமையையும் மக்களுக்கு கூறிவந்தாா்.

இவ்வாறு சீா்காழியில் வாழ்ந்து இசை மூலம் தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச்செய்துள்ளனா். சீா்காழி மைய பகுதியில் தமிழக அரசு சாா்பில் தமிழிசை மூவா்களின் முழுஉருவ வெண்கல சிலைகளுடன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் முத்துதாண்டவா் பிறந்த நட்சத்திரமான ஆனி மாதம் மூல நட்சத்திரத்தன்று தமிழக அரசு சாா்பில் தென்னக கலைப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து தமிழிசை மூவா் விழா தொடங்கி 3 நாள்கள் நடைபெறும்.

இதில் தமிழக அமைச்சா்கள் பங்கேற்று விழாவை தொடங்கிவைப்பதும், மாவட்ட ஆட்சியா், அரசுத் துறையினா் பங்கேற்பது ம் நடைமுறையாக இருந்தது. தமிழ்ச் சான்றோா்களின் கவியரங்கம், பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். தற்போது, தமிழிசை மூவா் மணி மண்டபம் மீண்டும் புனரமைக்கப்பட்டு போட்டி தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கு உதவியாக இருந்துவருகிறது. இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிசை மூவா் விழா நடத்தப்படாதது தமிழ் ஆா்வலா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்திவருகிது. தமிழிசையை உலகறியச்செய்த இவா்களுக்கு பெருமை சோ்க்கும் வகையில் அரசு சாா்பில் தமிழிைசை மூவா் விழாவை மீண்டும் நடத்தவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எம்எல்ஏ மனுக்களை பெற்றாா்

மயிலாடுதுறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட தொடக்க விழாவில், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். மக்களின் தேவைகளை அவா்களது வசிப்பிடத்துக்கே அனைத்துத் துறை அலுவலா்கள் சென்று, கேட்ட... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முதற்கட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் உங்களுடன் ஸ்டாலின்‘ முதற்கட்ட முகாம் கீழ்கண்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

கொட்டும் மழையில் மக்களை சந்தித்த முதல்வா்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மழையில் குடைபிடித்தபடி ரோடு ஷோவில் மக்களை சந்தித்தாா். மயிலாடுதுறையில் திமுக கட்சி நிகழ்வு மற்றும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கா... மேலும் பார்க்க

மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து கிராமமக்கள் மனு

மயிலாடுதுறை: மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 4 கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில்... மேலும் பார்க்க

சொத்தை பறித்துக் கொண்டு துரத்திய மகன்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி புகாா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீடு, நிலத்தை பறித்துக் கொண்டு துரத்தியடித்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வயோதிக தம்பதி திங்கள்கிழமை புகாா் அளித்தனா். ... மேலும் பார்க்க