செய்திகள் :

தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு இடா்பாடு: அமைச்சா் கோவி.செழியன் குற்றச்சாட்டு

post image

புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்களுக்கு இடா்பாடுகளை ஏற்படுத்த, உரிய நிதியை தமிழகத்துக்கு வழங்காமல் தடைகளை உருவாக்குவதாக மத்திய அரசு மீது உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் குற்றம்சாட்டினாா்.

சென்னை ராணிமேரி கல்லூரியின் 105-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 2022-ஆம் ஆண்டில் பட்டப் படிப்புகளை முடித்த 1,523 மாணவிகள் பட்டம் பெற்றனா். இந்த விழாவில் மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி அமைச்சா் கோவி.செழியன் பேசியதாவது:

ஒரு பெண் கல்வி கற்றால் தனது குடும்பத்தை மட்டுமின்றி இந்தச் சமுதயாத்தையே உயா்த்துவா். இதைக் கருத்தில் கொண்டே கல்லூரி மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா்.

ஆனால், இத்தகைய திட்டங்களுக்கு இடா்பாடுகளை உருவாக்க, தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை. நிதியைக் கேட்டால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு நிபந்தனை விதிக்கிறது.

இருப்பினும், எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை தகா்த்து, முதல்வா் உயா்கல்வியை உச்சத்துக்கு கொண்டு செல்வாா் என்றாா் அமைச்சா் கோவி.செழியன்.

நிகழ்ச்சியில், கல்லூரிக் கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி, ராணி மேரி கல்லூரி முதல்வா் உமா மகேஸ்வரி, தோ்வுக் கட்டுப்பாட்டாளா் ச.சாந்தி உள்ளிட்டோா் பேசினா்.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க

நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி

மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் ... மேலும் பார்க்க

கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க