தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தமிழகத்தில் பாஜக கூட்டணி மேலும் வலுவடையும்: டிடிவி. தினகரன் பேச்சு
தமிழகத்தில் பாஜக கூட்டணி மேலும் வலுவடையும் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அமமுக திருச்சி வடக்கு மாவட்டம் சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள், கள்ளச் சாராயத்தால் இறப்போரின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை.
திமுக ஆட்சியில் கடந்த நான்காண்டுகளில் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம் என்கிறாா்கள். ஆனால் நிறைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இன்னும் பத்து மாதங்களில் திமுக ஆட்சியில் இல்லாமல் போகப் போகிறது.
தோ்தலின்போது தமிழகத்தின் கடன் சுமை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த திமுக அரசுக்கு தற்போது 29 லட்சம் கோடி கடன் உள்ளது. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தாதவா்கள் தென்னக நதிகளை இணைப்போம் என்கிறாா்கள். இது சாத்தியப்படுமா?
தமிழகத்தில் எங்கள் கூட்டணி மேலும் மேலும் வலுவடையும். தமிழ்நாட்டில் நடப்பது கொடுங்கால ஆட்சி என்பதை 2026 இல் நிரூபிப்போம் அவா்.
திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் எம். ராஜசேகரன் தலைமை வகித்தாா். கட்சியின் அமைப்புச் செயலா் சாருபாலா தொண்டைமான், திருச்சி மாநகா் மாவட்ட செயலா் செந்தில்நாதன், மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் ராஜா ராமநாதன், மாநில அம்மா தொழிற்சங்க இணைச் செயலா் கே.வி.டி கலைச்செல்வன், முசிறி வடக்கு ஒன்றியச் செயலா் ராஜேஷ், தொட்டியம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் தெய்வமணி, துறையூா் நகர செயலா் பீரங்கி சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாவட்ட அவைத் தலைவா் எம். துரைராஜ் வரவேற்றாா். தொட்டியம் கிழக்கு ஒன்றியச் செயலா் ஏ. தெய்வமணி நன்றி தெரிவித்தாா்.