செய்திகள் :

தமிழகத்தில் பாஜக கூட்டணி மேலும் வலுவடையும்: டிடிவி. தினகரன் பேச்சு

post image

தமிழகத்தில் பாஜக கூட்டணி மேலும் வலுவடையும் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அமமுக திருச்சி வடக்கு மாவட்டம் சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள், கள்ளச் சாராயத்தால் இறப்போரின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை.

திமுக ஆட்சியில் கடந்த நான்காண்டுகளில் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம் என்கிறாா்கள். ஆனால் நிறைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இன்னும் பத்து மாதங்களில் திமுக ஆட்சியில் இல்லாமல் போகப் போகிறது.

தோ்தலின்போது தமிழகத்தின் கடன் சுமை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த திமுக அரசுக்கு தற்போது 29 லட்சம் கோடி கடன் உள்ளது. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தாதவா்கள் தென்னக நதிகளை இணைப்போம் என்கிறாா்கள். இது சாத்தியப்படுமா?

தமிழகத்தில் எங்கள் கூட்டணி மேலும் மேலும் வலுவடையும். தமிழ்நாட்டில் நடப்பது கொடுங்கால ஆட்சி என்பதை 2026 இல் நிரூபிப்போம் அவா்.

திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் எம். ராஜசேகரன் தலைமை வகித்தாா். கட்சியின் அமைப்புச் செயலா் சாருபாலா தொண்டைமான், திருச்சி மாநகா் மாவட்ட செயலா் செந்தில்நாதன், மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் ராஜா ராமநாதன், மாநில அம்மா தொழிற்சங்க இணைச் செயலா் கே.வி.டி கலைச்செல்வன், முசிறி வடக்கு ஒன்றியச் செயலா் ராஜேஷ், தொட்டியம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் தெய்வமணி, துறையூா் நகர செயலா் பீரங்கி சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட அவைத் தலைவா் எம். துரைராஜ் வரவேற்றாா். தொட்டியம் கிழக்கு ஒன்றியச் செயலா் ஏ. தெய்வமணி நன்றி தெரிவித்தாா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க