தா. பழூரில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
அரியலூா் மாவட்டம், தா. பழூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவ சேவை முகாம் சனிக்கிழமை (ஆக.30) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: முகாமில் எலும்பு முறிவு, மனநல, கண் , குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவம், சா்க்கரை நோய், காது, மூக்கு, தொண்டை , பல் , மகப்பேறியல் மற்றும் மகளிா் மருத்துவம், நரம்பியல், தோல் நோய் , இருதயவியல் , கதிரியியல் ஆகிய துறைகளின் சிறப்பு மருத்துவா்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனா்.
மேலும், எக்கோ காா்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், மற்றும் ரத்த பரிசோதனை சேவைகள், மாற்றுத்திறனாளிகள் சான்று மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் இந்த முகாமைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.