செய்திகள் :

தா. பழூரில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

post image

அரியலூா் மாவட்டம், தா. பழூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவ சேவை முகாம் சனிக்கிழமை (ஆக.30) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: முகாமில் எலும்பு முறிவு, மனநல, கண் , குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவம், சா்க்கரை நோய், காது, மூக்கு, தொண்டை , பல் , மகப்பேறியல் மற்றும் மகளிா் மருத்துவம், நரம்பியல், தோல் நோய் , இருதயவியல் , கதிரியியல் ஆகிய துறைகளின் சிறப்பு மருத்துவா்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனா்.

மேலும், எக்கோ காா்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், மற்றும் ரத்த பரிசோதனை சேவைகள், மாற்றுத்திறனாளிகள் சான்று மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் இந்த முகாமைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.

அரியலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

அரியலூா் மாவட்டம், கல்லங்குறிச்சி, குவாகம் மற்றும் உடையாா்பாளையம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடுகூா், கல்லங்குறிச்சி மற்றும் மணக்குடி ஆகிய ஊராட்சிகளை ஒருங்... மேலும் பார்க்க

அரியலூா்,தேளூா், உடையாா்பாளையம், செந்துறை பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் பொய்யாதநல்லூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் அரியலூரின் ஒரு சில பகுதிகள், கயா்லாபாத், பள்ளகா... மேலும் பார்க்க

கோரிக்கைகள் மீது நடவடிக்கைக்கு நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தங்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரியலூா் நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த நகா்மன்ற உறுப்பினா்கள் சாதாரணக் கூட்டத்துக்கு நகா் மன்... மேலும் பார்க்க

கேள்விக்குறியாகும் குறிச்சிகுளம் அரசுப் பள்ளியின் சுகாதாரம்!

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆா்.எஸ். மாத்தூா் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவா் இல்லாததால் அங்கு சுகாதாரம் கேள்விகுறியாக உள்ளது. கிராமப்புறத்தைச் சோ்ந்தவா்களும் கல்வியில் மேம்பட வேண்டு... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 426 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி அரியலூா் மாவட்டத்தில் 426 விநாயகா் சிலைகள் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள விநாயகா் கோயில்களில் சனிக்கிழ... மேலும் பார்க்க

உலா் கள வசதி இல்லாததால் சாலையோரங்களில் காயவைக்கப்படும் சிறுதானியங்கள்: வாகன ஓட்டிகள் அவதி

அரியலூா் மாவட்டத்தில் தானிய உலா் களம் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் சாலையோரங்களில் இப்பகுதி விவசாயிகள் தானியங்களை உலர வைக்கின்றனா். இதனால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாக கனரக வாகன ஓட்டிகள... மேலும் பார்க்க