தாராபுரம் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு
தாராபுரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தாராபுரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.53 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினாா். மேலும் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்டாா்.
இதில், தாராபுரம் நகராட்சி உதவிப் பொறியாளா் ராஜேஷ், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் மலைச்சாமி, சரவணபிரபு, நகரமைப்பு ஆய்வாளா் விக்னேஷ் குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.