தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்! - அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேச்சு
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பணியில் திமுகவினா் ஈடுபட வேண்டும் என்றாா் விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா், இரா. லட்சுமணன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினாா். தொகுதி பொறுப்பாளா்கள் விழுப்புரம் துரை. கி.சரவணன், வானூா் எஸ்.கே.பி.கருணாநிதி முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பங்கேற்று விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சருமான எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் பேசியது:
அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையிலானதிட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. திமுக அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். வீடு, வீடாகச் சென்று அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, அதை வாக்குகளாக மாற்றும் பணியை திமுகவினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா் பன்னீா்செல்வம்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், மாவட்ட பொருளாளா் இரா.ஜனகராஜ் உள்ளிட்டோா் பேசினா். மாவட்டத் துணைச் செயலா் தயா. இளந்திரையன், வழக்குரைஞா் சுவை.சுரேஷ், ஒன்றியச் செயலா்கள் தெய்வசிகாமணி, முருகவேல், கல்பட்டு வி.ராஜா, பிரபாகரன், முரளி, ராஜீ, செல்வமணி, பேரூா் செயலா் ஜீவா, ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதாநந்தம், வாசன், விழுப்புரம் நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா்கள் மணவாளன், புருஷோத்தமன், சாந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.