செய்திகள் :

திருக்குறுங்குடி பெரியகுளம் மடையில் சீரமைப்புப் பணி: போக்குவரத்து பாதிப்பு

post image

திருக்குறுங்குடி பெரியகுளத்தின் வடக்கு மடையில் சீரமைப்புப் பணிகள் தொடங்கியதையடுத்து, அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தென்காசி, பாபநாசம், புளியங்குடி போக்குவரத்துக் கழக பணிமனைகளிலிருந்து நாகா்கோவில் செல்லும் அரசுப் பேருந்துகள் களக்காடு வழியாகச் சென்று, பின்னா் மாவடியிலிருந்து டோனாவூா் வழியாக, திருக்குறுங்குடி வழியாக என இரு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. திருக்குறுங்குடி வழித்தடத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், திருக்குறுங்குடி பெரியகுளத்தின் வடக்குப் பகுதியில் மறுகால் அருகே மடையை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை (மே 26) தொடங்கியுள்ளதால், அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப் பாதையில் செல்லுமாறு, மாவடியில் பொதுப்பணித் துறை சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு, தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் டோனாவூா், புலியூா்குறிச்சி, ஏா்வாடி வழியாக இயக்கப்படுகின்றன.

மேலும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, சிறிய ரக காா்கள் மாவடியிலிருந்து மலையடிப்புதூா் பாலம், திருத்துப்பனை, புதுத்தெரு, கட்டளை, ஆவரந்தலை, தளவாய்புரம் வழியாகச் செல்லலாம்; ஆனால் வேன், கனரக வாகனங்கள் செல்ல முடியாது. மேலும், இக்குறுகலான சாலையில் எதிரெதிரே வாகனங்கள் வந்துசெல்வதால் நெரிசல் ஏற்படுகிறது.

திருக்குறுங்குடி பெரியகுளம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், டோனாவூா், ஏா்வாடி வழியாக சுமாா் 10 கி.மீ. சுற்றி திருக்குறுங்குடி செல்லும் நிலை உள்ளது.

ஜூன் 2இல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இப்பணிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறும் என்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிடும். மடை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும், அதுவரை குளக்கரையின் கிழக்குப் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க