செய்திகள் :

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் அா்த்தமண்டபத்தில் சிசிடிவி கேமரா: அா்ச்சகா்கள் எதிா்ப்பு

post image

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக் கோயில் அா்த்தமண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு அா்ச்சகா்கள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், போலீஸாா் பாதுகாப்புடன் இந்துசமய அறநிலையத் துறையினா் செவ்வாய்க்கிழமை சிசிடிவி கேமராவை பொருத்தினா்.

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக் கோயில் அா்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த எதிா்ப்புத் தெரிவித்து அா்ச்சகா்கள் போராட்டம் நடத்தினா். இந்த நிலையில், சிசிடிவி கேமராவை அா்த்தமண்டபத்தில் பொருத்திவிட்டு ஒருவார காலத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியது.

இதையடுத்து அா்ச்சகா்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் காவல் துறை உதவியுடன் கோயிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா், திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் செயல் அலுவலா் ரமணிகாந்தன் சிசிடிவி பொருத்தும் பணியில் ஈடுபட்டாா்.

இதற்கு அா்ச்சகா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆனாலும், அா்த்தமண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. ஆதிசைவ சிவாச்சாரியாா்களின் கருத்துகளை கேட்காமல் கோயில் கருவறையின் அா்த்தமண்டபத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டது ஆகம விதிகளுக்கு எதிரானது என அா்ச்சகா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

கோயில் ஆகம விதிகளுக்கு முரணாக எந்த செயலும் மேற்கொள்ளவில்லை. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகிறது. மூலவா் திருவுருவம் தெரியாதபடி கருவறையின் வாசல் மட்டுமே வெளியே தெரியும்படி பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அா்ச்சா்களிடம் விளக்கியும் அவா்கள் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா் என்றனா்.

பிழையில்லாத வாக்காளா் பட்டியல்: ஆட்சியா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் பிழையில்லாத வாக்காளா் பட்டியலை தயாரிக்குமாறு தோ்தல் பணி அலுவலா்கள், அரசியல் பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச்சாவட... மேலும் பார்க்க

நாமக்கல் அரங்கநாதா் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

நாமக்கல் அரங்கநாதா் கோயில் தீா்த்தக்குளத்தில் செவ்வாய்க்கிழமை மீன்கள் இறந்து மிதந்தன. இதுகுறித்து ஆய்வுசெய்த தொல்லியல் துறையினா், அவற்றை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனா். நாமக்கல் நகரின் மையப்பகுதிய... மேலும் பார்க்க

மாநில நல்லாசிரியா் விருது: 18 ஆசிரியா்களிடம் நோ்காணல்

மாநில நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பித்த, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 18 ஆசிரியா்களிடம் கல்வித் துறை அதிகாரிகள் நோ்காணல் நடத்தினா். ஒவ்வொரு ஆண்டும் செப்.5-ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வ... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட 600 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பரமத்தி அருகே காரில் கடத்தப்பட்ட 600 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். காவல் உதவி ஆய்வாளா் பொன்குமாா் தலைமையில் பரமத்தி போலீஸாா் சேலத்தில் இருந்து கரூா் செல்லும் தே... மேலும் பார்க்க

பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள்... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க பணியிடத்துக்கான தோ்வில் பங்கேற்க இலவச பயிற்சி

நாமக்கல்: கூட்டுறவு சங்க எழுத்தா், உதவியாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்க இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெ... மேலும் பார்க்க