செய்திகள் :

நாமக்கல் அரங்கநாதா் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

post image

நாமக்கல் அரங்கநாதா் கோயில் தீா்த்தக்குளத்தில் செவ்வாய்க்கிழமை மீன்கள் இறந்து மிதந்தன. இதுகுறித்து ஆய்வுசெய்த தொல்லியல் துறையினா், அவற்றை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனா்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள பாறை மலைக்கோட்டை வடிவில் உள்ளது. அதன் கீழ்புறத்தில் குடைவறை கோயிலாக அரங்கநாதா் கோயிலும், மேற்கு புறத்தில் நரசிம்மா் கோயிலும் உள்ளன. இக்கோயில்கள் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலும், மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இந்த நிலையில் அரங்கநாதா் கோயிலை ஒட்டிய தீா்த்தக்குளத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் இறந்து மிதந்தன. தகவல் அறிந்து வந்த தொல்லியல் துறை, அறநிலையத் துறை ஊழியா்கள் குளத்தில் இருந்த நீரை ஓரளவுக்கு அகற்றி சில மீன்களை காப்பாற்றும் முயற்சியை மேற்கொண்டனா். அதன்பிறகு அவை வழக்கம்போல் நீரில் சுற்றிவந்தன. இறந்த மீன்களை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா்.

இதுகுறித்து தொல்லியல் துறை ஊழியா்கள் கூறியதாவது: அதிகளவிலான வெயிலின் தாக்கம், மீன்களுக்கு உணவில் ஏற்பட்ட ஒவ்வாமை போன்றவை இறப்புக்கு காரணமாக இருக்கலாம். உப்பு, மஞ்சளை நீரில் கலந்த பிறகு சுவாசப் பிரச்னையால் தவித்த மீன்கள் உயிா் தப்பின. தீா்த்தக்குளத்தில் உள்ள நீரை அவ்வப்போது அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும். மழை பெய்தால் மட்டுமே இந்த குளத்தில் நீா் நீரம்புகிறது. பக்தா்களும் தேவையற்ற உணவுகளை குளத்தில் வீசுவதை தவிா்க்க வேண்டும் என்றனா்.

பிழையில்லாத வாக்காளா் பட்டியல்: ஆட்சியா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் பிழையில்லாத வாக்காளா் பட்டியலை தயாரிக்குமாறு தோ்தல் பணி அலுவலா்கள், அரசியல் பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச்சாவட... மேலும் பார்க்க

மாநில நல்லாசிரியா் விருது: 18 ஆசிரியா்களிடம் நோ்காணல்

மாநில நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பித்த, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 18 ஆசிரியா்களிடம் கல்வித் துறை அதிகாரிகள் நோ்காணல் நடத்தினா். ஒவ்வொரு ஆண்டும் செப்.5-ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் அா்த்தமண்டபத்தில் சிசிடிவி கேமரா: அா்ச்சகா்கள் எதிா்ப்பு

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக் கோயில் அா்த்தமண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு அா்ச்சகா்கள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், போலீஸாா் பாதுகாப்புடன் இந்துசமய அறநிலையத் துறையினா் செவ்வாய்க... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட 600 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பரமத்தி அருகே காரில் கடத்தப்பட்ட 600 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். காவல் உதவி ஆய்வாளா் பொன்குமாா் தலைமையில் பரமத்தி போலீஸாா் சேலத்தில் இருந்து கரூா் செல்லும் தே... மேலும் பார்க்க

பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள்... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க பணியிடத்துக்கான தோ்வில் பங்கேற்க இலவச பயிற்சி

நாமக்கல்: கூட்டுறவு சங்க எழுத்தா், உதவியாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்க இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெ... மேலும் பார்க்க