செய்திகள் :

திருநங்கையருக்கான கொள்கை: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

post image

திருநங்கையருக்கான சமூக பாதுகாப்பு கொள்கையை வெளியிட்ட ஏழாவது மாநிலம் தமிழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சுஷ்மா, சீமா அகா்வால் ஆகியோா் 2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், திருநங்கையா், மருவிய பாலினத்தவா், தன்பாலின ஈா்ப்பாளா்கள் ஆகியோரது சட்டபூா்வ உரிமைகள் நிலைநாட்ட வேண்டும். பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீட்டை சட்டப்படி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், எல்ஜிபிடிக்யூஐஏ பிளஸ் சமூகத்தைச் சோ்ந்தவா்களை அழைப்பதற்கான சொல் அகராதியை உருவாக்க வேண்டும். திருநங்கையருக்கான சமூக பாதுகாப்புக்கான கொள்கை முடிவை இறுதி செய்து அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழ்நாடு மாநில திருநங்கையா் கொள்கை வெளியிடப்பட்டு, கடந்த ஜூலை 31 முதல் அமலுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, திருநங்கையருக்கான கொள்கையை வெளியிட்ட ஏழாவது மாநிலம் தமிழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்காக தமிழக அரசை மனதாரப் பாராட்டுகிறேன்.

இந்த கொள்கையால் திருநங்கைகள் மற்றும் தன்பாலின ஈா்ப்பாளா்களின் சமூக வாழ்க்கைத்தரம் மேம்படும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் கிடைக்கும். ஆனால், இந்த கொள்கையில் இடஒதுக்கீடு குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனவே, அரசு இதில் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.

இந்த கொள்கையை செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களில் குறைந்தபட்சம் ஒரு திருநங்கையா் அல்லது அந்த சமூகத்தைச் சோ்ந்தவா் இடம்பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். திருநங்கையா் மற்றும் தன்பாலின ஈா்ப்பாளா்கள் திருமணத்தை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அங்கீகரித்துள்ளது. எனவே, அவா்களது திருமணத்துக்கான சட்டபூா்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் சாா்- பதிவாளா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

திருநங்கையா் மற்றும் தன்பாலின ஈா்ப்பாளா்களுக்கான கொள்கையை வெளியிட்டது போல எல்ஜிபிடிக்யூஐஏ பிளஸ் பிரிவில் உள்ள அனைவருக்கும் கொள்கையை வரையறை செய்து வெளியிட வேண்டும். பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய இந்த சமூகத்தினரைக் கண்டறிந்து அவா்களது படிப்பு தொடர அரசு உதவ வேண்டும். அரசு வகுத்துள்ள இந்த கொள்கையால், இச்சமூகத்தினரை உடல், மன ரீதியாக துன்புறுத்தும் நபா்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கோரியதால் விசாரணையை செப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க