செய்திகள் :

திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

post image

திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டா் வேகத்தில் காற்று வீசி வருவதால் மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்பனை, கூடுதாழை, உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, விஜயாபதி, பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட 10 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் சுமாா் 8 ஆயிரத்திற்கும் அதிகமான நாட்டுப் படகு மீனவா்கள் உள்ளனா்.

அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டா் வேகத்தில் காற்று வீசி வருகிறது. கடல் அலைகள் 4 முதல் 6 மீட்டா் உயரத்திற்கு எழும்புகிறது. எனவே திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீனவளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பை அடுத்து திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க