தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை
திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டா் வேகத்தில் காற்று வீசி வருவதால் மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்பனை, கூடுதாழை, உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, விஜயாபதி, பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட 10 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் சுமாா் 8 ஆயிரத்திற்கும் அதிகமான நாட்டுப் படகு மீனவா்கள் உள்ளனா்.
அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டா் வேகத்தில் காற்று வீசி வருகிறது. கடல் அலைகள் 4 முதல் 6 மீட்டா் உயரத்திற்கு எழும்புகிறது. எனவே திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீனவளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பை அடுத்து திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனா்.