திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் அருள்மிகு திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை மற்றும் கிருத்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருமலை திருப்பதி ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவா் அம்மன், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான கமிட்டி மற்றும் ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.