தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் திங்கள்கிழமை (மே 26) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மானாமதுரை செயற்பொறியாளா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்புவனம் அருகேயுள்ள நெல்முடிக்கரை, அரசனூா், பொட்டப்பாளையம், திருப்பாச்சேத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் திருப்புவனம், புதூா், பழையூா், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேல ராங்கியம், வயல்சேரி, கலியாந்தூா், மேல வெள்ளூா், கீழவெள்ளூா், மாங்குடி, அம்பலத்தடி, மணலூா், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், அதிகரை, வடகரை, பூவந்தி, பொட்டப்பாளையம், புலியூா், கொந்தகை, கீழடி, சொட்ட தட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூா், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், முதுவந்திடல், அரசனூா், இலுப்பக்குடி, பெத்தானேந்தல், ஏனாதி, படமாத்தூா், வேம்பத்தூா், களத்தூா், பில்லூா் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.