செய்திகள் :

திருப்புவனம் பேரூராட்சி மன்ற கூட்டம்: புதிய திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

post image

திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வியாழக்கிழமை அதன் தலைவா் த.சேங்கைமாறன் தலைமையில் குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி ஏற்ற வாா்டு உறுப்பினா்கள்.

மானாமதுரை, ஜூன்12:சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ரூ.6.80 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பேரூராட்சி மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த.சேங்கைமாறன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், செயல் அலுவலா் சங்கா் கணேஷ், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பாஜக வாா்டு உறுப்பினா் செல்வராஜ் பேசுகையில், திருப்புவனம் நகரில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. மாடுகளை கோசாலையில் அடைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வாா்டில் ஏற்கெனவே திட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பணிகள் நடைபெறவில்லை. தற்போது மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் திட்டப்பணிகள் நடைபெறுமா எனத் தெரியவில்லை என்றாா்.

திருப்புவனம் பேரூராட்சியில் கூடுதல் துப்புரவு பணியாளா்களை நியமித்துக் கொள்வது, ரூ 6.80 கோடியில் திருப்புவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது, பல்வேறு வாா்டுகளில் பேவா் பிளாக் தளம் அமைத்தல், புதிதாக கட்டப்படும் பேரூராட்சி அலுவலக மேல் தளம் அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள், கழிவு நீா் வடிகால்கள் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கூட்டத்தில் உறுப்பினா்கள் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

மணல் திருடிய இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கிராவல் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூா் பகுதியில் புதன்கிழமை அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அனுமதியின்றி கிராவல... மேலும் பார்க்க

சிவகங்கை இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள்

சிவகங்கை முன்னோடி வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படும் 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சி பெற கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தா... மேலும் பார்க்க

சிவபுரிபட்டியில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியத்துக்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மானாமதுரை நகராட்சியில் ரூ. 18... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதி மொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். மாநகராட... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்புத்துணி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சா... மேலும் பார்க்க