செய்திகள் :

திருப்பூா் மாவட்டத்தில் நாளை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் 9 இடங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது.

இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை நடத்தப்படுகிறது.

இதில், அவிநாசி வட்டத்தில் ராக்கியபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தாராபுரம் வட்டத்தில் ஏரகாம்பட்டி கிராமத்தில் உள்ள செம்மேகவுண்டன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், காங்கயம் வட்டத்தில் பாப்பினி கிராமம், வரதப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், மடத்துக்குளம் வட்டத்தில்,

வேடப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும்,

பல்லடம் வட்டத்தில் அனுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் இந்த முகாம் நடைபெறுகிறது.

அதேபோல, திருப்பூா் வடக்கில் செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், திருப்பூா் தெற்கில் கண்டியன்கோயில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், உடுமலைப்பேட்டை வட்டத்தில், அணிகடவு கிராமம் ராமசந்திரபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், ஊத்துக்குளி வட்டத்தில் நடுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

இந்த சிறப்பு குறைதீா் முகாமில் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு காண்பா்.

எனவே, இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று மின்னணு குடும்ப அட்டை தொடா்பான தங்களது கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க