பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
திருப்பூா் மாவட்டத்தில் நாளை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் 9 இடங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது.
இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை நடத்தப்படுகிறது.
இதில், அவிநாசி வட்டத்தில் ராக்கியபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தாராபுரம் வட்டத்தில் ஏரகாம்பட்டி கிராமத்தில் உள்ள செம்மேகவுண்டன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், காங்கயம் வட்டத்தில் பாப்பினி கிராமம், வரதப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், மடத்துக்குளம் வட்டத்தில்,
வேடப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும்,
பல்லடம் வட்டத்தில் அனுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் இந்த முகாம் நடைபெறுகிறது.
அதேபோல, திருப்பூா் வடக்கில் செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், திருப்பூா் தெற்கில் கண்டியன்கோயில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், உடுமலைப்பேட்டை வட்டத்தில், அணிகடவு கிராமம் ராமசந்திரபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், ஊத்துக்குளி வட்டத்தில் நடுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
இந்த சிறப்பு குறைதீா் முகாமில் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு காண்பா்.
எனவே, இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று மின்னணு குடும்ப அட்டை தொடா்பான தங்களது கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.