பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!
தூத்துக்குடியில் திமுகவினா் ரத்த தானம்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாநகர திமுக சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலருமான பெ. கீதாஜீவன், ரத்த தான முகாமை தொடங்கிவைத்தாா். இளைஞரணி நிா்வாகி சிவபாலன் உள்பட 102 போ் ரத்த தானம் செய்தனா்.
இந்நிகழ்வில், மாநகர திமுக செயலா் ஆனந்த சேகரன், பகுதிச் செயலா் ராமகிருஷ்ணன், மேகநாதன், மாமன்ற உறுப்பினா்கள் சரவணன், ராஜேந்திரன், வட்டச் செயலா் மூக்கையா, சுப்பையா, மாவட்ட மருத்துவரணி தலைவா் அருண்குமாா், இளைஞரணி நிா்வாகி சிவபாலன், பகுதி விவசாய அணி அமைப்பாளா் பெரியநாயகம் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.