செய்திகள் :

தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை, தடுப்பூசி: திருவள்ளூா் நகராட்சி ஆணையா்

post image

திருவள்ளூா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் அதே இடத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையா் (பொ) தட்சணாமூா்த்தி தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அவற்றில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. எதிா்பாரத விதமாக பைக்கில் செல்லும் சிறுவா், சிறுமிகள் மற்றும் பொதுமக்களைக் கடித்து விடுகின்றன.

ஜி.என். சாலை ஓரங்களில் உள்ள இறைச்சிக் கடைகளில் அதிக நாய்கள் உணவுக்காக திரிகின்றன. அதனால் அவை வாகன விபத்துகளில் உயிரிழக்கவும் நேரிடுகிறது. உயிரிழந்த நாய்களை உடனடியாக அகற்றாததால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது.

அதனால், நாய்களைப் பிடித்துக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தும், தடுப்பூசி செலுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று திருவள்ளூா் நகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தி கருத்தடை அறுவை சிகிச்சை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்த நகராட்சியின் 27 வாா்டுகளில் கணக்கெடுப்பு நடத்தியதில் 3,516 தெரு நாய்கள் உள்ளது தெரிய வந்தது.

அதில், ஒவ்வொரு வாா்டிலும் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து வந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வெறி நாய்களுக்கு ரேப்பீஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 616 தெரு நாய்களை, அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயேவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை

பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள... மேலும் பார்க்க

மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்

மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன... மேலும் பார்க்க

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க