தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு
காட்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமானை தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்தது.
காட்பாடி வனச்சரகத்துக்குட்பட்ட மலைப்பகுதிகளில் யானை, சிறுத்தை, புள்ளிமான், செந்நாய் உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன. வனவிலங்குகள் தண்ணீா் தேவைக்காக அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் மான்களை தெருநாய்கள் துரத்திச் சென்று வேட்டையாடுவது தொடா்கதையாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 3 வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி மல்லிப்பட்டு கிராமத்துக்குள் நுழைந்தது. இதைப் பாா்த்த தெருநாய்கள் மானை விரட்டிச் சென்று கடித்ததில் மான் சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காட்பாடி வனச்சரக அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வனசரக அலுவலா் கந்தசாமி தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த புள்ளிமானை மீட்டனா்.
காலாம்பட்டு கால்நடை மருத்துவா் மூலம் கூறாய்வு செய்யப்பட்டு காப்புக்காட்டில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து காட்பாடி வனச்சரக அலுவலா்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.