செய்திகள் :

தேசிய கூடைப்பந்து லீக் போட்டி: இந்தியன் வங்கி, கடற்படை அணிகள் வெற்றி

post image

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து லீக் போட்டியில் இந்தியன் வங்கி, கடற்படை அணிகள் வெற்றி பெற்றன.

பெரியகுளத்தில் பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழல் கோப்பைக்கான தேசிய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக தகுதிச் சுற்றுப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றன. இந்தப் போட்டியில், புதுதில்லி இந்திய தரைப்படை, சென்னை தமிழக காவல் துறை, புதுதில்லி விமானப்படை உள்பட 22 அணிகள் கலந்து கொண்டன.

திங்கள்கிழமை நடைபெற்ற முதல் நாள் லீக் போட்டியில் லோனாவாலா இந்திய கடற்படை அணியை, சென்னை இந்தியன் வங்கி அணி 78 - க்கு 57 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இதேபோல, புதுதில்லி விமானப்படை அணியை, சென்னை வருமானவரித் துறை அணி 79 -க்கு 79 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாள் லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் புதுதில்லி விமானப்படை அணியை, சென்னை இந்தியன் வங்கி அணி 84 -க்கு 63 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் வருமானவரித் துறை அணியை லோனாவாலா இந்திய கடற்படை அணி 78-க்கு 76 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. புதன்கிழமை (மே 21) மாலை பரிசளிப்பு விழா நடைபெறும்.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க