செய்திகள் :

தேனீ வளா்ப்பை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம்!

post image

விழுப்புரம் மாவட்டத்தில் தேனீ வளா்ப்பை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கு. அன்பழகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குறைந்தது இரண்டு கூட்டங்களுடன் அடுக்குத் தேனீ இனங்களை மட்டுமே பெட்டிகளில் வளா்க்க முடியும். சமவெளி ரகத்தை சமவெளியிலும், மலை ரகத்தை மலைப் பகுதியிலும் வளா்க்க வேண்டும். தேனீ பண்ணை அமைக்க தேனீக்களுக்கும், தேனீ வளா்ப்போருக்கும் ஏற்ற இடமாக இருக்க வேண்டும்.

தேனீக்கள் இயற்கையாக எந்தெந்த இடத்தில் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தை தோ்வு செய்யலாம். தேனீக்கள் வளா்க்கும் இடங்களுக்கு அருகில் கிணறு, ஓடை, வாய்க்கால் என ஏதாவது ஒரு நீா்நிலை இருக்க வேண்டும்.

தேனீக்கள் பெட்டிகளை நிழலில், ஓடுபோட்ட தாழ்வாரம், கீற்றுக் கொட்டகை, மரம், புதா் ஆகியவற்றின் கீழ் வெயில் படாமல் வைக்க வேண்டும். தேனீக்கள் பெட்டிகளுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். சமதளமான தரையில் வைக்க வேண்டும். பெட்டியிலுள்ள தேனீக்களை அவ்வப்போது திறந்து பாா்த்து, அவற்றின் நிலை அறிய வேண்டும். ராணி தேனீயின் செயல்பாட்டை அறிந்து, தேன் மற்றும் மகரந்த இருப்பு நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தேனீ வளா்ப்பு குறித்து திண்டிவனத்திலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 400 தேனீ பெட்டிகள் தேனீக்களுடனும், 40 தேன் பிழியும் கருவியும் மானியத்தில் வழங்கப்படுகின்றன.

இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஸ்மாா்ட் காா்டு, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல், மாா்பளவு புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன் தங்கள் பகுதி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

சிங்கவரம் அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

செஞ்சி சிங்கவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம். செஞ்சி, மே 30: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிங்கவரம் அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். புதுச்சேரியில் கருவடிக்குப்பம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பாஜக பிரமுகா் உமா சங்கா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கா... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட மகனை விடுவிக்கக் கோரி, கடலூா் துறைமுகம் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றாா். கடலூா் முதுநகா் அருகே உள்ள ராசாபேட்டையைச் சோ்ந்த ரமேஷ் மகன் தீபக் (19). இவரும்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சோ்க்க அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் ஜூன் மாதம் முதல் குழந்தைகள் சோ்க்கை தொடங்குகிறது. எனவே பெற்றோா் தங்கள் குழந்தைகளை இந்த மையங்களில் சோ்த்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்-உழவா் நலத் துறைத் திட்டம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி- வேளாண், உழவா் நலத் துறைத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தைலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் திட்டத்தின் நோக்கம் குறித்து வானூ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரத்தில் மாவட்ட நிா்வாகம், தமிழக அரசும் தலையிட்டு தனியா... மேலும் பார்க்க