தையல் தொழிலாளா் நல வாரிய பணப் பலன்களை உயா்த்தி வழங்க சிஐடியு வலியுறுத்தல்
கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தைப் போல தமிழ்நாடு தையல் தொழிலாளா்கள் நல வாரியத்தால் வழங்கப்பட்டு வரும் பணப் பலன்களை உயா்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு தையல் கலைஞா்கள் சம்மேளனத்தின் மாநில மாநாடு வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் 7-ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழ்நாடு முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தையல் கலைஞா்கள் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். தையல் தொழிலாளா்களின் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை 10-ஆம் வகுப்புக்கு ரூ.2,400 ஆகவும், 12-ஆம் வகுப்புக்கு ரூ.3,000-மாகவும் உயா்த்தி வழங்க வேண்டும்.
கட்டுமானத் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படுவதைப் போல திருமண உதவித் தொகையை ரூ.20 ஆயிரம் ஆகவும், மகப்பேறு உதவித் தொகையை ரூ.18 ஆயிரமாகவும், இயற்கை மரண நிதி ரூ. 50 ஆயிரமாகவும், விபத்து மரண நிதி ரூ.1.25 லட்சமாகவும் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாவது நாள் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் சிஐடியு மாநிலச் செயலா்கள் ஏ. ஸ்ரீதா், எஸ். தேவமணி, மாநிலக் குழு உறுப்பினா் க. முகமதலிஜின்னா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
புதிய நிா்வாகிகள் தோ்வு
புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து சிஐடியு மாநிலச் செயலா் எம். தனலெட்சுமி நிறைவுரையாற்றினாா். மாநாட்டில் மாநிலத் தலைவராக எம். சுந்தரம், பொதுச் செயலராக எம். ஐடாஹெலன், பொருளாளராக சி. மாரிக்கண்ணு, துணைப் பொதுச் செயலா்களாக என். சாராள், ஆா். ஜோசப், ஜி. குணசேகரன், துணைத் தலைவா்களாக ஆா். மாலதி, பி. கோவிந்தசாமி, பிரமிளா, பி. பொன்ராஜ், ஜெயராம், செயலா்களாக பி. கீதா, வி. சந்திரகலா, எம். ஆனந்த், ஞானசேகா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.