செய்திகள் :

தொடா் மழை: சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் இன்று செல்லத் தடை

post image

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை (மே 27) செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு கடந்த ஏப். 3-ஆம் தேதி முதல் நாள்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனா்.

இந்த நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (மே 25, 26) ஆகிய இரு நாள்கள் பக்தா்கள் மலையேறத் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த இரு நாள்களாக சதுரகிரிக்குச் செல்ல பக்தா்களை அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் பெய்து வரும் தொடா் மலை காரணமாக சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்ததால், செவ்வாய்க்கிழமையும் (மே 27) சதுரகிரி மலைக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.

சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரி காந்தி நகரைச் சோ்ந்தவா் முத்தையா (40). இவா்... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த செல்ல கோபால் மனைவி மாடத்தி (... மேலும் பார்க்க

ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும்! ஜி.கே. வாசன்

தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் புதன்கிழமை நட... மேலும் பார்க்க

விஸ்வநாதா், விசாலாட்சி கோயிலில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்

சிவகாசி விஸ்வநாதசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 26-ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்ச்சியும், அன்று இரவு மூஷிக வ... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி மனு

சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி, சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவு, மூலதனம் பராமரிப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி சங்கத்தினா் அண்மையில் கோரி... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

ராஜபாளையத்தில் திங்கள்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் தென்றல் நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் நாகராஜன் (40). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுக் குடிக்கும் பழக்கம் இருந்தது.... மேலும் பார்க்க