தொப்பூரில் லாரிகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு!
தருமபுரி மாவட்டம், தொப்பூரில் நின்று கொண்டிருந்த லாரி மீது சரக்கு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். இதனால் தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூளகிரியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையத்துக்கு லாரி ஒன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தது. இந்த லாரியை ஓட்டுநா் மணிகண்டன் என்பவா் ஓட்டிச் சென்றாா்.
இந்த லாரி தொப்பூா் சோதனைச் சாவடி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்குப் பெட்டக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநா் மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தொப்பூா் காவல் துறையினா், மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த விபத்து காரணமாக, தருமபுரி - சேலம் சாலையில் சுமாா் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.