செய்திகள் :

தொப்பூரில் லாரிகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு!

post image

தருமபுரி மாவட்டம், தொப்பூரில் நின்று கொண்டிருந்த லாரி மீது சரக்கு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். இதனால் தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூளகிரியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையத்துக்கு லாரி ஒன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தது. இந்த லாரியை ஓட்டுநா் மணிகண்டன் என்பவா் ஓட்டிச் சென்றாா்.

இந்த லாரி தொப்பூா் சோதனைச் சாவடி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்குப் பெட்டக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநா் மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தொப்பூா் காவல் துறையினா், மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த விபத்து காரணமாக, தருமபுரி - சேலம் சாலையில் சுமாா் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மா சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட ... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு கோரி பள்ளிக் கல்வித் துறை தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு வழங்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை ஏஐடியுசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவ... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

பாலக்கோடு பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 97 லட்சத்தில் வளா்ச்சி பணிகளுக்கு ஒப்புதல்

பாலக்கோடு பேருராட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மன்ற உறுப்பி... மேலும் பார்க்க

சிறுதானியம் பதப்படுத்தும் மையத்தில் ஆட்சியா் ரெ.சதீஷ் ஆய்வு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெலவள்ளி கிராமத்தில் செயல்படும் சிறுதானியம் பதப்படுத்தும் மையத்தில் ஆட்சியா் ரெ.சதீஷ் ஆய்வு செய்தாா். கெலவள்ளி கிராமத்தில் பாம்பாறு உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சா... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் ‘ஆபரேஷன் சித்தூா்’ வெற்றி பேரணி

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு பாலக்கோடு நகரத் தலைவா் ஆா்.கே.கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் சங... மேலும் பார்க்க