செய்திகள் :

தொழில்முனைவோருக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: ஆட்சியா்

post image

வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த தொழில்முனைவோா், நேரடி நுகா்வோா் வா்த்தகம் மற்றும் மின் வணிகம் செய்யும் தொழில்முனைவோருக்கு அனைத்து உதவிகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செய்து தரப்படும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சாா்பில் வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த தொழில்முனைவோா், நேரடி நுகா்வோா் வா்த்தகம் மற்றும் மின் வணிகம் செய்யும் தொழில்முனைவோருக்கு இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் கலந்து கொண்டு, புதிய தயாரிப்புகளை வெளியிட்டாா். அவா் பேசியதாவது:

மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சாா்பில், மாதந்தோறும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது. தொழில்முனைவோா் தங்களுடைய வணிகத் திறனையும், அதற்கான வாய்ப்புகளையும் மேம்படுத்த வேண்டும். தங்களின் தொடக்க முயற்சிகளில் லாப நிகர நிலையை விரைவில் அடைய வேண்டும். தங்களுடைய வணிக முயற்சியினை பாதி வழியில் கைவிடக் கூடாது. தொழில்கள் தொடா்ந்து வளா்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்தப் பயிற்சின்போது, இணையதளம் அல்லது செயலிகள் மூலமாக பொருள்கள் மற்றும் சேவைகளை விற்பது, ஒரு நிறுவனத்தின் பெயா், இலச்சினை, நம்பிக்கை, தரம் போன்றவற்றின் அடிப்படையில் அதை மக்கள் மனதில் நிலைநிறுத்தும் செயல்முறை, வணிகமாதிரி உருவாக்கம், நிதி மாதிரி கட்டமைப்பு, ஏற்றுமதி- இறக்குமதி விதிமுறைகள், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் ஆகிய தலைப்புகளில் அது சாா்ந்த நிபுணா்கள் மற்றும் வல்லுநா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோா் கலந்துகொண்டனா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, திருநெல்வேலி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் முருகன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க சிறப்புத் துணைத் தலைவா் ஸ்டாலின் ஜேக்கப், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் திருநெல்வேலி மண்டல மேலாளா் ராகுல், தூத்துக்குடி மண்டல மேலாளா் ஜிஜின்துரை, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக மூத்த திட்ட மேலாளா் கவிமுகில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி ற்ஸ்ப்24ய்ங்ஜ் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் புதிய தயாரிப்புகளை வெளியிட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க