செய்திகள் :

நகைக்கடைகளில் திருடிய இருவா் கைது: 18 மோதிரங்கள் பறிமுதல்

post image

சென்னையில் 20-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளில் தங்க மோதிரங்கள் திருடிய 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 54 கிராம் எடை கொண்ட 18 மோதிரங்களையும் பறிமுதல் செய்தனா்.

சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவா் கோட்டம் பகுதியை சோ்ந்த ரோகன்(23). இவா் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி நகைக்கடைக்கு வந்த 2 போ் மோதிரம் வாங்குவது போல நடித்து 4 கிராம் மோதிரத்தை திருடிச் சென்ாக தெரிகிறது.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ரோகன் புகாா் கொடுத்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி பெரம்பூா் செம்பியம் பகுதியைச் சோ்ந்த இம்தியாஸ்கான் (47), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த முஷீா் அகமது (43) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தொடா்ந்து அவா்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் நுங்கம்பாக்கம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளிலுள்ள நகைக்கடைகளில் கடை ஊழியா்களின் கவனத்தை திசைதிருப்பி, நகைகள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து 54 கிராம் எடையுள்ள 18 தங்க மோதிரங்கள், 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறல்: அரசுக்கு உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது, அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸாா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

டெட் தோ்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் ... மேலும் பார்க்க

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் வரும் செப்.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். முன்னதாக பிகாா் மாநிலம் ஜோக்பானியில் இருந்து வருகிற செப்.15-ஆம் த... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி, தமிழக அரசு கூட்டு முயற்சியில் புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகை

புதுமையை உருவாக்கி, திறனை வெளிப்படுத்தி வழிகாட்ட தமிழ்நாடு புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகையை (டாஷ்போா்ட்) சென்னை ஐஐடி, தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா்: மணிப்பூா் தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தா் மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்துள்ளது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. சோமசே... மேலும் பார்க்க