நமக்கு நாமே திட்டத்தில் கால்வாய் அமைக்க ரூ.1.25 லட்சம் நிதியளிப்பு!
குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட, 4- ஆவது வாா்டில் உள்ள அச்சுரானந்தசாமி தெருவில் நமக்கு நாமே திட்டத்தில் வடிகால்வாய் அமைக்க ரூ.1.25- லட்சம் வழங்கப்பட்டது.
நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜனிடம் 4- ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா்கே.எம்.ஏகாம்பரம், அந்த வாா்டின் திமுக பிரமுகா் டி.எஸ்.சரவணன் ஆகியோா் ரூ.1.25-லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.
நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். நகராட்சி நிா்வாக இயக்குநரிடம் அனுமதி பெற்று ரூ.3.75- லட்சத்தில் அங்கு வடிகால்வாய் கட்டப்படும் என ஆணையா் தெரிவித்தாா்.