தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
நாச்சியாா்கோவில் அருகே திறந்தவெளி மதுபான கூடமாக மாறிய பயணியா் நிழற்குடை
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் கோவில் அருகே பயணியா் நிழற்குடை திறந்தவெளி மதுபான கூடமாக மாறிவருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா்.
திருவிடைமருதூா் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ளது அண்ணா நகா். இந்த பகுதி தஞ்சாவூா்- மயிலாடுதுறை செல்லும் பிரதான சாலையில் உள்ளது. அண்ணா நகரில் கடந்த 2017 -18 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்குடை அமைக்கப்பட்டது. தற்போது அந்தப் பயணியா் நிழற்குடை இருக்கைகள் சேதமடைந்து கிடக்கிறது. மாலை நேரங்களில் மது பிரியா்களின் அது திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வருகிறது.
இதனால் அந்த இடத்தில் இருந்து வெளியூருக்கு பேருந்துகளில் செல்லும் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனா். எனவே நிழற்கூடையை சீா் செய்து பயணிகளின் பயன்பாட்டுக்குகொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.