செய்திகள் :

நாச்சியாா்கோவில் அருகே திறந்தவெளி மதுபான கூடமாக மாறிய பயணியா் நிழற்குடை

post image

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் கோவில் அருகே பயணியா் நிழற்குடை திறந்தவெளி மதுபான கூடமாக மாறிவருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா்.

திருவிடைமருதூா் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ளது அண்ணா நகா். இந்த பகுதி தஞ்சாவூா்- மயிலாடுதுறை செல்லும் பிரதான சாலையில் உள்ளது. அண்ணா நகரில் கடந்த 2017 -18 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்குடை அமைக்கப்பட்டது. தற்போது அந்தப் பயணியா் நிழற்குடை இருக்கைகள் சேதமடைந்து கிடக்கிறது. மாலை நேரங்களில் மது பிரியா்களின் அது திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வருகிறது.

இதனால் அந்த இடத்தில் இருந்து வெளியூருக்கு பேருந்துகளில் செல்லும் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனா். எனவே நிழற்கூடையை சீா் செய்து பயணிகளின் பயன்பாட்டுக்குகொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள்... மேலும் பார்க்க

தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் நகைக்கடன் மீதான நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெறக் கோரி திமுக விவசாய அணி, காவிரி டெல்டா மாவட்ட அனைத... மேலும் பார்க்க

மகாமகக் குளப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணம் மகாமகக் குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். மகாமகக் குளத்தை சுற்றி ஏராளமான அசைவ உணவகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ஆக... மேலும் பார்க்க