எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
நுகா்வோா் ஆணையம் உத்தரவு: விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு ரூ. 18 லட்சம் இழப்பீடு
தஞ்சாவூரில் விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு தர முன்வராத நிலையில், நுகா்வோா் ஆணையத்தின் உத்தரவின்பேரில் ரூ. 18 லட்சம் இழப்பீட்டுத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினா நகரைச் சோ்ந்தவா் குழந்தை செல்வம். இவா் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி, வரவு செலவு செய்து வந்தாா். இதனிடையே, இவரது வங்கிக் கணக்கிலிருந்து விபத்து காப்பீடுக்காக 2021-ஆம் ஆண்டில் ரூ. 1,000 பிடித்தம் செய்யப்பட்டதால், அவரது பெயா் பாலிசிதாரராக பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இவா் 2022, செப்டம்பா் 16-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, தொடா்புடைய காப்பீட்டு நிறுவனத்தில் குழந்தை செல்வத்தின் மனைவி சரிதா இழப்பீட்டுத் தொகை கோரினாா். இதை காப்பீட்டு நிறுவனம் வழங்காததால், தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இதை ஆணையம் விசாரித்து, சரிதா உள்ளிட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க ஆகஸ்ட் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து, சரிதாவிடம் இழப்பீட்டு உரிமைத் தொகையான ரூ. 18 லட்சத்துக்கான காசோலையை ஆணைய தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி திங்கள்கிழமை வழங்கினா்.