நேசமணி சிலைக்கு ஆட்சியா் மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு போராடியவரும், குமரி தந்தை என்று அழைக்கப்படுவருமான, மாா்ஷல் நேசமணியின்131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாலை அணிவித்து, மரியாதைசெலுத்தினாா்.
தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவா் என்.சுரேஷ்ராஜன், ஜே.ஜி.பிரின்ஸ் எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்,ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சி லதா, நேசமணியின் பேரன் ரெஞ்சித் அப்பலோஸ்அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ஜவஹா், செல்வகுமாா், முன்னாள்எம்.பி. ஹெலன் டேவிட்சன், அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினா் நவீன்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.